மௌனம்...

யாம் எதுவாய் இருக்கிறோம்?
சில நேரங்களில்,
எமக்கே புரியவில்லை,
எம் மௌனத்தின் அர்த்தங்களை!

 மனம் பூரித்து சிரிக்கிறதோ,
காயத்தில் புதைந்து கரைகிறதோ.
அத்தனையும்,
எம் மௌனத்தின் அடர்த்தியில் அடங்கி விடுகிறதே...

நீ எம்மில் அம்பு எய்யவும்,
யாம் அனுமதிக்கிறோம்,
அருகில் அமரவும்  இடம் அளிக்கிறோம்!
எம் பயம் எல்லாம்,
உம்மைக் கண்டு அல்ல,
எம் மௌனத்தைக் கண்டே!

 ஏதோ ஒரு கொடூரம்,
வன்மம்,
இல்லை...
செதும்பல்,
தவழ்தல்,
இதில்  எம் மௌனம் எவ்வகை?

மௌனத்தோடு ஒரு புன்னகை..
இதன் அர்த்தம்,
எதிராளியை, யாம் மன்னித்தேன் என்றா,
இனி தான் தொடக்கம் என்றா?

இது பேச்சு வரா மழலையின் மௌனமா?
பேசிப் பயனில்லை எனும் மிருக மௌனமா?
பேசாமலே விளங்க வைக்கும் இயற்கையின் மௌனமா? 

அடர்த்தியான,
 நிறமற்ற,
சலனமற்ற,
எம் மௌனம்...
இப்போதும் இமை மூடி மூழுகுகிறேன்!!

Tuesday, August 9, 2011 at 9:32 AM

4 Comments to "மௌனம்..."

Artham theriyadhu oru mounam!
Its good as long as it makes u smile :) its good as long as it keeps u penning down awesome lines..
Keep smiling..
Keep blogging :)

மெளனத்தின் மொழியாக்கம்...!

எனக்கு உங்க கவிதை.. மொழியில் வரும் ஒரு பாடலை நினைவு படுத்துகிறது.

மௌனமே.. உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.

சில நேரங்களில் மௌனம்.. பல பிரச்சினைகளை.. சமாளிக்கும்!

நல்ல கவிதை.. தேங்க்ஸ்! :)

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

Post a Comment