ஞாபங்களுக்குள் ஒரு பயணம்!
......
ஒரு ஞாயிறு மாலை..
யாரோ நேற்று வந்தார்கள்..
ஏதோ தந்தார்கள்!
அவர்களின் புன்னகையை எம் கன்னங்களில் அப்பி விட்டுச் சென்றார்கள்!!
எதை..எதையோ ...எம் அனுமதியின்றி கவர்ந்து சென்றார்கள்?
இது நாள் வரை...
குழந்தையிடமும் தமிழ் மொழி பேசி வந்தோம்!
நீர் தாம் மழலை மொழி பேச கற்றுத் தந்தாய்!!
எம் அறிவை நீ அறிவாய்..
இருந்தும் ..
அறியாமையை நீ தைத்து அணிந்து கொண்டாய்!!
இம்'மை'கலே கொண்டே அச்சான எம் எழுத்துகளுக்கு...
தம்'மை' தந்து...
தோழ'மை' கொடுத்து...
கண் மூடி கேட்கும் இசை போல் அறிவாக...
கண் திறந்து, கூடி வாழ்தல், அன்பாக..
யாம் செய்யும் பிழையை உணர்த்த...
அதே பிழையை எமக்காக நீ செய்து எமக்கு உணர்த்தினாய்!!
இவ்வார்த்தையை நீர் தான் எம்முள் பதிவு செய்தாய்!!!

4 Comments to "யாரோ நேற்று வந்தார்கள்.."