இந்த வார்த்தைகளும் ஏதோ பிதற்றலாகவே தெரிகிறது!
எப்பொதும் இருக்கும் இந்த மென்மையும், அழகுகளும் ..
யாம் களைத்து போய் விட்டோம்,
எம் மேனி கிழிக்கின்ற முட்கள் வேண்டும்!
எம் எலும்புகள் உடைக்கின்ற இடி வேண்டும்!
சுகமென்றும் வேண்டாம்!
துயரென்றும் வேண்டாம்!
எமக்கு இந்த அசதி களைய வழி காணும்!
இந்த மௌனம் வேண்டாம்,
மொழிகள் வேண்டாம்,
கோவம் வேண்டும் ,
காயங்கள் வேண்டும்!
சிந்தனை வேண்டாம், தெளிவு வேண்டாம்!
எம்மை யாமாய் உணர்த்தும் , உணரவைக்கும்..
எதுவுமே வேண்டாம்!
ரசனை வேண்டாம்..
ஒரு படி மேலே சொல்லுமானால்,
பாசமோ, வேஷமோ..அறவே வேண்டாம்!
சராசரியான மனிதமும் வேண்டாம், மிகைப் படுத்திய கடவுளும் வேண்டாம்!
முகமூடியே முகமாய் மாறவும் வேண்டாம்!
வெயிலில் கறுத்து ,
கடும் குளிரில் நடுங்கி,
துருவங்கள் நீந்தும் , ஒரு வீரப் பயணம் வேண்டும்!
புல்வெளியிலும் , பனி துளிகளிலும்,
போகும், இந்த பல்லக்குப் பயணம்,
எமக்கு வேண்டாம்!
சிறு துகளாய் நொறுங்கிப் போக வேண்டும் ,
துகள் சேர்த்து பெரு மலையாய் உருமாற வேண்டும்!
யாம் பிரதிபலித்த பின்பங்கள் உடைய வேண்டும்,
யாம் யாதும் இல்லாமல் போக வேண்டும் !
பழைய உறவுகளை முறிக்க வேண்டும்,
மூளை கொண்டு ஒரு மிருக(மிரட்டும்) ஆட்டம் வேண்டும்!

6 Comments to "மிருக ஆட்டம்...!"