எல்லாம் சர்வ மயம்..........



துயில் போல் ஒரு விழிப்பு..
விழித்தல் போல் ஒரு கனவு..
எல்லைகளில்லை..
தொல்லைகளில்லை....

கடப்போர் ஆயிரமுண்டு,
பார்வைக்கு சிக்குவதில்லை..
சுட்டெரித்த மூச்சுக்காற்று இன்று சுடுவதில்லை..
புலன்களை விடுத்து..

காற்று வெளியினிலே காணும் ஆட்டம்....
தாலாட்டோடு கரைகிறது...
இலக்கு கருவரையோ, கல்லையரையோ?
பயணிப்பது நானோ அல்லது நீரோ?
எல்லாம் சர்வ மயம்..........

Wednesday, October 13, 2010 at 6:28 PM

2 Comments to "எல்லாம் சர்வ மயம்.........."

துயில் போல் ஒரு விழிப்பு..
விழித்தல் போல் ஒரு கனவு..
எல்லைகளில்லை..
தொல்லைகளில்லை....


..... அருமை.

உணர்வு நிலையில் இருந்துதான் படித்தேன் ரம்யா....!

சர்வமயமான ஒரு பயணத்தில் சாத்தியமாய் பார்க்கும் பார்வையில் எது இலக்கு என்று தீர்மானிக்க முடியாமல் போகும் போது புலன் எப்படி வரும்? மூச்சுக்காற்று எங்கே இருக்கும்...?

உண்மையில் துயில் விழிப்புதான்.. விழிப்பு கனவுதான்..! வார்த்தைகளும் கவிதையின் மூலமும் நீ அறியாமல்தான் வந்ததா இல்லை நீ அறிந்தேதான் எழுதினாயா? என்று கேள்விக்குறிக்கும் ஆச்சர்யக்குறிக்கும் இடையே பயணித்து பயணித்து.. சோர்வடைந்து போயிருக்கிறது என் மனது.

ரம்யான்னா...சும்மாவா? !!!!!

Post a Comment