என்னின் இயல்புகள் உன்னை சலனப் படுத்தியிருக்கலாம்!
உன்னின் சுயத்தை கொஞ்சம் அசைத்து கூட இருக்கலாம்!
அதன் பிரதிபலனாக,
என் ஆதார வேர்களில் ஏதொரு மாற்றத்தையும் எதிர்பாக்காதே!
உன்னை, நீயாக, நான் ஆராதிப்பேன்,
என்னை, நானாக, நீ அனுமதிக்கும் பட்சத்தில்...
உன் உதடுகளால் ஆகட்டும்,
உள்ளங்கையால் ஆகட்டும்,
எனக்கு உன் முத்தங்கள் வேண்டாம்!!
என் இதழ்களில் ஆகட்டும்!
இதயத்தில் ஆகட்டும்!
உன்னின் கனவில், என் வருகை குறைந்தால்,
என் தூக்கத்தை கெடுக்காதே!
என் ரசனை அழகு தான்!
என் இயல்பு மென்மை தான்!
என்ற உன் தீர்ப்புக்கு,
எத்தனை காலம் நான் ஒப்பனை இட்டுக் கொள்வது??
பிம்பங்கள் நாம்..
நீ என்னையும்,
நான் உன்னையும்,
பிரதிபலித்து வாழ்வோம்!
உரசிக்கொள்ள வேண்டாம்.
எட்டி நடக்கிறேன்..
இதோ,
நீ அழுகிறாய், என்னை சபிக்கிறாய்!
நான்,
இன்னும் எட்டி நடக்கிறேன் வேகமாக..
ஆனால்,
என் மனம் ஏனோ பிதற்றுகிறது?!!

2 Comments to "அன்பே..."