நீ எங்கோ! நான் ஏனோ?

நீ எங்கோ!
நான் ஏனோ?


இருப்பினும்,


நாட்கள் நகர நகர,
அறிவை கழித்த ஆசைகளும்,
ஆசைகள் கலந்த அழகுகளும்,
என புதுப் புது சேர்மங்கள்!

என் தனிமைகளில் என் இருக்கங்களில்,
புது ரேகைகள் முளைத்து விரிகின்றன!

நான் எதுவாய் இருப்பினும்,
அப்படியே உள்வாங்கி,
அதுவாய் சிரிக்கும்,
அனுமதிக்கும்..
என் கண்ணாடி நீயென குருகுகிறேன்!

உன் மூளை கொண்டு எதை உடைத்தாலும்,
இருதயம் கொண்டு சேர்த்து எடுப்பாய்,
என்றே நான் தெறித்து சிதறுகிறேன்!

இவ்வார்தைகளுக்குள் இருக்கும் இடைவெளியாய்,
இழையட்டும்,
பிறர் சுயம் மதிக்கும் நம் காதலும்!
என நீ உரைப்பாய் என்றே எழுதுகிறேன் !

இது உன்னைக் காணாத பொழுதுகளில்,
உனக்காக...

உன்னைக் காணும் வேளையில்,
அத்தனையும் உரைத்திட ஏதுமோ?
பின்,
உனக்கான நான், என்பதை,
நீ இயம்ப நான் கேட்பது எப்போது?

Monday, May 2, 2011 at 7:32 PM

2 Comments to "நீ எங்கோ! நான் ஏனோ?"

உணர்வுகளின் வடிவம் கவிதையாகும் போது அங்கே எதார்த்தம் மிளிர்வது தவிர்க்க முடியாதது. இந்த கவிதையும்தான்...

//அறிவை கழித்த ஆசைகளும்,
ஆசைகள் கலந்த அழகுகளும்,
என புதுப் புது சேர்மங்கள்!//

ஆசைகளில் அறிவு இருக்கக் கூடாது ரம்யா..! அறிவு கழிந்த ஆசைகளில் தான் பொய்மைகள் வீழ்ந்து சத்தியம் சத்தியமா இருக்கும்...அப்படி அறிவைக் களைந்தாலேயே ஆசைகள் அழகாய்ப் போய்விடுவதும் என்பது அறிவு கழிந்ததின் விளைவு...இல்லாததை தோற்றுவிக்கும் போதுதான் புதுமையான அழகுகள் வெளிப்படுகின்றன. (ரொம்ப குழப்புறேனோ????)

ஒரு நிலமென்றால் நீரை வாங்கி உட்கொள்ள வேண்டும் ஐ மீன் பிரதிபலிக்கும் பிம்பத்தில் தன்னைப் போலவே ஒரு உருவைக் கண்டு சந்தோசித்தாலும் கண்ணாடி வாங்கும் தன்மையுடையதாய்தானிருக்கிறது ரிசப்டிவாக....! இதில் ஒரு எதிர்மறை இயக்கம் அற்றுப் போய்... ஒற்றைத் திசையில் நகரும் ஒரு சந்தோசமும் கிடைக்கிறது.


//பிறர் சுயம் மதிக்கும் நம் காதலும்!
என நீ உரைப்பாய் என்றே எழுதுகிறேன் !//

ஐ திங்க் இந்த வரிகள்தான் மொத்த கவிதையின் ஜீவனான பொக்கிஷம்!

//உன்னைக் காணும் வேளையில்,
அத்தனையும் உரைத்திட ஏதுமோ?
பின்,
உனக்கான நான், என்பதை,
நீ இயம்ப நான் கேட்பது எப்போது//

அப்படியே உள்வாங்கி,
அதுவாய் சிரிக்கும்,
அனுமதிக்கும்..

இத்தகைய இயல்பு கொண்ட ஒன்று வேறென்ன செய்யும்......இயம்பியதை பிரதிபலிக்கத்தானே செய்யும்...!!!!!

இந்த கவிதைக்கு நான் எழுதும் கமெண்ட் ஒரு தனிக்கட்டுரையாய் மாறும் அபாயம் இருப்பதையும், ஒரு கமெண்ட் போட வந்து பிளாக்கையே குத்தகை எடுக்கும் என் ஏகாதிபத்திய போக்கை கண்டிக்கும் உன் மைண்ட் வாய்ஸூம் கேட்பதால்.......நான் இதோட கிளம்புறேன் ரம்யா....ஹா ஹா ஹா!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

ஏ...அப்பா.....பதிவுக்கு ஏற்ற மாதிரி ..எவ்வளோ பெரிய கமெண்ட் .....ஹி ..ஹி ...

Post a Comment