உன்னை பற்றிய சிந்தனைகள்
புன்னகையை தவிர
வேறொன்றும் தருவதில்லை!
நீ மிக அழகாக கடத்துகிறாய்,
உன்னுடன் கழிந்த என் பொழுதுகள்,
மௌனத்தை தவிர
வேறதுவும் இசைப்பதில்லை!
நீ அறிவிக்கும் காதல்
மிக மிருதுவானது,
அது எமக்கு கண்ணியத்தை தவிர,
வேறதுவும் உரைக்கவில்லை!
நீ சுட்டெரிக்கும்
உண்மைகளை உணர்த்தினாய்,
அது எம்மை இன்னும்
உரமேற்றியதே அன்றி,
வேறாய் நினைவில்லை!
நான் வெறுக்கிறேன்,
எமது அறிவு கொண்டு வெறுக்கிறேன்,
உன்னை நேசிக்கும் எமது இயல்பை!
நான் வெறுக்கிறேன்,
எமது ரசனைகளுக்கு
முட்டுப் போடும் எமது அறிவை!
நான் வெறுக்கிறேன்,
உன் கோபங்களை
அனுமதிக்கும் எம் மௌனங்களை!
மீண்டும் நான் வெறுக்கிறேன்,
இருந்தும் உனக்காக எழுதும் என்னை!
எம் முழு மனது கொண்டு,
உன்னை வாழ்த்துகிறேன்,
எம் முழு அறிவு கொண்டு,
நகைக்கிறேன் எம்மை கண்டு
எப்போதும் !?
பின் குறிப்பு:

5 Comments to "வாழ்த்துக்கள்"