தேடித் தேடி சேர்த்த ஒன்றை...
முழுமையாய் தொலைக்க..
தொலையத்தானே வேண்டும்?!
என் மொழியை மறந்து,
உணர்வே மொழியாய்....
வார்த்தைகளுக்குள் தொலைந்த வாழ்க்கையை....
மௌனத்தில் தானே மீட்க முடியும்!!
படரும் பனி மூட்டதிற்குள், மாயமாய்ப் போகிற அழகைப் போல...
துறத்தும் பற்றுகளைத் தொடர்ந்து மாயமாய்ப் போவேன்.
தெரியாத பாதை,
அடர்ந்த இருள்,
படர்ந்த குளிர்.......
அர்த்தம் தேடா மனது,
சளைத்துப் போன கால்கள்,
சுருங்கிப் போன பசி,
மறத்துப் போன வலி..........
தொலைந்து போன பயம்,
தொலைத்த சந்தோசம்...
காணும் காட்சி,
கவிழும் இமைகள்...
தொடரும் பார்வை...
தொடங்கும் பயணம் ...
அலையாய் இரைச்சல்....
குவிந்த ஈர்ப்பு...
காலங்கள் கடந்த வேகம்....
ஜென்மங்கள் பயணித்த களைப்பு..
அத்தனையையும் உள்வாங்கிக் கொண்ட அசதி,
அத்தனையும் நின்றது,
ஒரு புள்ளியில் அடங்கியது.
எஞ்சியது , மிஞ்சியது, ஸ்தம்பித்து நின்றது....
அமைதி ....
வெறுமை .....
என் அடையாளங்கள் மறந்து,
என் அறிவை துறந்த..
ஒரு பயணம் ....
என் உறவுகளை உடைத்து,
நண்பர்களை மறந்து,
ஒரு நிகழ்வு..............

5 Comments to "தொலையத்தானே வேண்டும்?!"