எது தானோ நிஜம்...

உள்ளம் கேட்கும் கேள்விகளுக்கு,
பதில் தெரியாமல் தானோ, (பல நேரங்களில் புரியாமல்)
இல்லாததை அடைய ஓடுகிரமோ?

உலகம் தரும் தனிமையை,
வாழ பக்குவம் இல்லாததால் தானோ,
உறவுகள் தேடி அலைகிரமோ?

உண்மை உணர்த்தும் நிதர்சனத்தை,
ஏற்க முடியாமல் தானோ,
பொய்யில் உழன்று கொண்டிருக்கிறோமோ?

எல்லாமே கேள்விகளாய்,
அனுமானங்களாய் ...


எதற்கு இந்த ஓட்டம்?

விடைகள் தேடும் போதும் கேள்விகள் தான் விழுகின்றன!!!

Monday, August 2, 2010 at 8:50 AM

2 Comments to "எது தானோ நிஜம்..."

This comment has been removed by the author.

பொய்யில் உழல்வதும், உறவுகள் சேர்ப்பதும்..... ஏன் என்று கேள்விகள் கேட்டு இப்போது நெஞ்சில் அடிக்கிறது உனது கேள்விகள்.

விடை தேடும் போது வந்து விழும் கேள்விகளையும், கவிதையாய் இதை சொன்ன உன்னையும் நெஞ்சோராம் தேக்கி வைத்து என் நினைவுகளில் கரைத்து ஊற்றி நகரும் போது முகத்தில் அறைகிறது உன் வரிகள்

//உலகம் தரும் தனிமையை,
வாழ பக்குவம் இல்லாததால் தானோ,
உறவுகள் தேடி அலைகிறோமோ?//

மீண்டும் பயணிக்கிறேன்....உன்னையும் கவிதையையும் என்னுள் தொலைத்து விட்டு.....

Post a Comment